Friday, June 22, 2007

அவளின் யதார்த்த எதிர்பார்ப்புகள்


மேகத்தறியில் நெசவு செய்ய வேண்டாம்..
நிர்வாணம் மறைக்க உடை கொடு போதும்..

சூரியனை சுருக்கி வீரனாக வேண்டாம்..
என் கற்பிற்கு காவலாயிரு போதும்..

மின்னலை பிடித்து ஆபரணமாக்க வேண்டாம்..
இருப்பதை கரைக்காமல் வாழு போதும்..

விண்மின் பிடித்து விருந்து வைக்க வேண்டாம்..
பசிக்கும் வேளை கையளவு உணவிடு போதும்..

என்னழகை பாராட்ட வேண்டாம்..
தாய்மையடைய செய் போதும்..

மக்களை ஏமாற்றி செல்வம் வேண்டாம்..
நேர்மையாயிரு போதும்..

என‌க்கு முன் சுவ‌ர்க்க‌ம் பார்க்க‌ வேண்டாம்..
உன் விழிக‌ளை பார்த்து கொண்டே ம‌ர‌ணம் தா போதும்..

2 comments:

பத்மா said...

nandru nanbare.tamizh fontil ezhuthathathirku mannikavum.ungal anaithu kavithaigalum nanraai ullana.keep writing.

இரசிகை said...

m..gud