Wednesday, June 20, 2007

இக்க‌ரைக்கு அக்க‌ரை ப‌ச்சை..


கூடை சுமக்கும் குழந்தையின் எண்ணம்

அ,ஆ படித்ததில்லை..
நல்ல சொக்கா போட்டதில்லை..
தலையிலிருக்கும் பாரம் விட‌
படிப்பின்மை பாரம் தாங்கவில்லை..
வீட்டருகே நட்பு இல்லை..
சரியான சாதம் இல்லை..
விழாக்களை பார்த்ததில்லை..
போலியாக வாழ்ந்ததில்லை..

எனக்கு தெரிந்த ஒரே சந்தோச‌ம்
தினமும் நாங்க தின்னும் கூட்டாஞ்சோறு.. ______________________________________________
புத்தக பையுடனிருக்கும் சிறுவனின் எண்ணம்

முதுகிலிருக்கும் சுமை
படிப்பு புரியாத‌தால்..
மனதிலிருக்கும் சுமை
அன்பு கிடைக்காததால்..

நான் ஏங்கும் ஒரே சந்தோஷம்
என்றாவது கிடைக்குமா குடும்பத்துடன் கூட்டாஞ்சோறு..

2 comments:

கபீரன்பன் said...

I don't know from where you got the photograph. But your effort to link the contrasting aspects of life is striking. Keep it up

இரசிகை said...

kannu kalangeeduchchunga...