Friday, May 25, 2007

"அன்பின் வேர்கள்"

அம்மாவின் தாய்மை
அத்தையின் அக்கறை
சித்தியின் அனுசரணை
தங்கையின் கொஞ்சல்
தோழியின் நட்பு
காதலியின் கண்ணிர்
மனைவியின் இல்லறம்
மகளின் அன்புமுத்தம்
பேத்தி மாரில் தந்த உதை

ஆணென்னும் மரம் வாழ
வாழ்க்கையின் அன்பு வேர்களோ
பெண்?

எதற்கு நன்றி சொல்வேன்??

எதற்கு நன்றி சொல்வேன்??

கொள்ளை கொண்ட விழிகளுக்கா..

மனதில் ஜதி போட்ட கொலுசுக்கா..

காதலில் தித்திக்க வைத்த மனதிற்கா..

கேசத்தை கோதும் விரல்களுக்கா..

பூப்போல் காதலை உதிர்த்த இதழுக்கா..

காமத்தை முற்றுபெற வைத்த முத்ததிற்க்கா..

இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் அழகிற்க்கா..

தோல்வியை தூங்க செய்த தோள்களுக்கா..

சிரமத்தில் அரவணைத்த கரங்களுக்கா..

முதுமையிலும் குறையாதிருக்கும் நேசத்திற்கா..

எல்லாம் சேர்த்து
உன்னில் தந்த கடவுளுக்கா?...

Monday, May 21, 2007

"கிருஷ்ணா"


கருமையான விழிகளில்..
வழிகின்ற கருணையில்..

பொழிகின்ற‌ அன்பினில்..
த‌ருகின்ற‌ வ‌ர‌ங்க‌ளில்..

கோகுல‌த்து குறும்பினில்..
கோபிய‌ரை க‌வ‌ர்கையில்..

புல்லாங்குழ‌ல் நாத‌த்தில்..
அது த‌ரும் ம‌ய‌க்க‌த்தில்..

இத‌ழில் வ‌ழியும் வெண்ணையில்..
அதை திருடும் வேளையில்..

பூலோக‌ லீலையில்..
அத‌னுட‌ன் த‌ரும் பாட‌த்தில்..
கண்டேனே கருமை நிற கண்ணனை!!

ராஜனின் சிந்தனைகள் - 2

இன்றைய காதல்??

காசில்லா காமம் பல இதயங்களில்..
பலமில்லா அன்பு சில மனதுகளில்..
மத,ஜாதியால் கருகும் பல சமயங்களில்..
என்றாவது சேரும் குறிஞ்சி பூக்கும் வேளையில்..
-------------------------------------------------------------------
செய்தித்தாள்

க‌த்தி முனை விட‌ பேனா முனை வ‌லிமை
ப‌டித்த‌தில் தெரிந்த‌து..
அம்முனை எரிபொருளால் ஆன‌தோ!!
ம‌துரை தீக்கிரையில் புரிந்த‌து..

Wednesday, May 16, 2007

பசி


"பசிக்கிறதம்மா!!" அந்த உயிரின் கடைசிக் குரல்!
எச்சிலில்லா நாக்கு! ஈரமறியா உதடுகள்!!
பரட்டை தலை! ஒட்டிய வயிறு!
சூம்பிய கால்கள்! அரிசியின் உருவத்தை மறந்த கண்கள்!
உணவை பார்த்த மகிழ்ச்சியில் விரல்கள்!
அம்மணத்தை மறைக்க பாதி உடை!
வயிற்றின் நிர்வாணத்தை மறைக்க உணவேங்கே?

தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!
எனக்காக ஜகத்தை அழிக்கவேண்டாம்..
ஒரு பிடி உணவளியுங்கள்!

தானம்

கண்டதை உற்று நோக்கும் கண்களை
தானம் செய்!!

காதலுக்காக சிந்தும் ரத்தத்தை
தானம் செய்!!

கேளிக்கையில் மிந்தும் உணவை
தானம் செய்!!

ஏழைக்கு இலவசமாக கல்வியை
தானம் செய்!!

நண்பர்களுக்கு பூப்போன்ற மனதை
தானம் செய்!!

உன் பாதிக்கு உண்மையான கற்பை
தானம் செய்!!

தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை
தானம் செய்!!

உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"
தானம் செய்!!

இவையனைத்தும் விளம்பரப்படுத்தாம‌ல்
நிதானமாய் செய்!!

Saturday, May 12, 2007

நிலா ரசிகருக்காக



நிலா ரசிகையின் மனது

நான் பார்த்த முதல் மின்னல்
உன் கண்களில்..

நான் ஓரக்கண்ணீல் ரசித்த முதல் ஓவியம்
உன் புன்சிரிப்பில்..

நான் கண்கள் பனித்த முதல் தருணம்
உன் செல்ல கோபத்தில்..

நான் விரும்பிய முதல் பரிசு
உன் முத்தத்தில்..

நான் கண்ட முதல் ஸ்பரிசம்
உன் தொடுதலில்..

நான் உன்னிடம் பகிரா முதல் கவிதை
என் காதல்..

நான் பெற இருக்கும் முதல் உவகை
உன் காதல்..

நிலா ரசிகனின் மனது

கள்ளி! உன் விழியினை விட
கூர்மையான வரிகளை
ஒளித்தது ஏனோ!!
இன்றைய நிலவொளியில் மிளிரதானோ!!

கருந்திட்டு கொண்ட முழுநிலவு வெட்கியது
என்னால் வந்த பரு கொண்ட உன் மதிமுகம் கண்டு..
நிலா ரசிகனாகிய நான் தூரத்தில் ஒளிரும் நிலவினை மறந்து
உன் காதலை பெற்று பூலோக நிலவின் ரசிகனானேன்!!

என் இனிய இணையதள தோழிக்கு..



கண்கள் சந்திக்கவில்லை
மலர் போன்ற மனங்கள் சந்தித்தன..
கைக் குலுக்கவில்லை
நட்பென்னும் மொட்டு விரிந்தன..

முகமறியா நமக்குள் எதற்கு
இந்த நட்பென்று வினவியதற்கு
"நம்பிக்கை" என்ற ஒற்றை வரியில்
என் நட்பினை அள்ளி சென்றவளே..

என் குரல் கேட்டு அடைந்த உவகையிலும்
என் செல்ல கோபத்தில் உருண்டோடிய கண்ணிரிலும்
அதீத அன்பினில் உரிமையுடன் தரும் திட்டுகளிலும்
தெரிகிறது உன் நட்பின் வலிமை..

உன் பெயரைவிட-உன்
நட்பின் ஆத்மாவை நேசிக்கிறேன்..
"சாட் தோழன்" என்பதை "வாழ்நாட் தோழனாக" மாற்று
என்னுயிரையும் நம் நட்பிற்கு ஈவேன்..

குறிஞ்சி மலர் போல் நம் நட்பு
மலர்ந்து மணம் வீசாவிடினும்
வாடாமலிருக்க முற்படுவோம்
வா என் தோழியே!!

Friday, May 11, 2007

காதல் பறவைகள்




கூண்டிலிருக்கும்
காதலர்கள் ஏன் எதிர் எதிராக??
ஊடலா??
தயக்கமா??

புகைப்பட கலைஞர் காதலனின்
முத்தத்தை பார்த்த வெட்கத்தில்
அவள்.. :)

காதல் வெளி உலகத்திற்கு
தெரிந்தவிட்ட பயத்தில்
அவன்!!

பாவம் அவர்களது பூப்போன்ற காதலுக்கு தெரியாது..
மதம் என்ற தீ அழித்துவிடும் என்று..

Thursday, May 10, 2007

காந்தி தாத்தா


நீ ரத்தம் சிந்தி வாங்கிய
சுதந்திரத்தை இன்னும் உன்
பேரன்கள் உணரவில்லை..

உன் தடி கொண்டு இரு தலையிலும்
தட்டி அறிவுக் கண்ணை திறந்து வை!!

அப்போழுதாவது புரியட்டும்- ஒரே
வீட்டின் வாசலை ஏன் பிளக்கிறோம் என்று!!

Tuesday, May 8, 2007

மீனவக் கவிதைகள்


அந்திவேளையில் மீனவன் வலை வீசுகிறான்..
அவற்றை புசிக்க அல்ல!!
அன்றைய கஞ்சியை ருசிக்க!!
------------------------------------------
இருட்டு வேளையில் பயத்துடன்
வலைவீசுகிறான் தமிழ் மீனவன்..
இன்றைய பலி மீனா?? நானா??

Friday, May 4, 2007

மழை





பேரிடியுடன் மழை..
விவசாயின் மனதில் புன்சிரிப்பு..
நனைந்த உடையுடன் குழந்தைகள்..
ஜன்னலோர மழைத்துளியில் அழகான பிம்பங்கள்..

ரசிக்க இத்தனை இருக்க,
காவிரித்தாயின் மனதில் தீராத கேள்வி??
"எந்த மகனின் தாகத்தை தீர்ப்பேன்!!"