Friday, May 25, 2007

எதற்கு நன்றி சொல்வேன்??

எதற்கு நன்றி சொல்வேன்??

கொள்ளை கொண்ட விழிகளுக்கா..

மனதில் ஜதி போட்ட கொலுசுக்கா..

காதலில் தித்திக்க வைத்த மனதிற்கா..

கேசத்தை கோதும் விரல்களுக்கா..

பூப்போல் காதலை உதிர்த்த இதழுக்கா..

காமத்தை முற்றுபெற வைத்த முத்ததிற்க்கா..

இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் அழகிற்க்கா..

தோல்வியை தூங்க செய்த தோள்களுக்கா..

சிரமத்தில் அரவணைத்த கரங்களுக்கா..

முதுமையிலும் குறையாதிருக்கும் நேசத்திற்கா..

எல்லாம் சேர்த்து
உன்னில் தந்த கடவுளுக்கா?...

No comments: