Thursday, March 29, 2007

நட்பு


அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

Saturday, March 3, 2007

தோழி


நீ


என்னை பிரிந்து


சென்று விட்டாய் என்று


எண்ணி எண்ணி ஏங்க


உன் காதலன் அல்ல நான்...



எனினும்


நான்


எண்ணி எண்ணி ஏங்கும்


நாம் கை கோர்த்து


திரிந்த நாட்களின்


காதலனாய் இங்கு நான்...

நான் ரசித்த கவிதைகள்

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.
- பி.எம்.நாகராஜன்
-----------------------------------------------------------
வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பாவாழிய செந்தமிழ்!
வாழ்கநற் றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக!தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

-பாரதியார்
---------------------------------------------------------------------
மழைத்துளி

பன்னீர்துளிகள்வேண்டாம் -
உன்வியர்வைத்துளிகள்போதும் -
அதுமண்வாசனையை கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

என் கவிதைகள்



நி பேசு மெதுவாய்!!
இதமாய்!! மென்மையாய்!!
ஏனென்றால் நீ
பேசுவதை கேட்பது
என் காதுகள் அல்ல
என் இதயம்..
--------------------------------------------------------------
உதாசினம்

இப்படியா என்னை உதாசீனிப்பது?
இதோ பார் நீ
முகம் கழுவிய நீரில்
என் முத்தங்கள்..
------------------------------------------------------------
அமைதி

அந்த அமைதி அவனுக்கு பிடிக்கவில்லை

சுனாமியில் அடித்து சென்ற விட்டின் வெறுமை!!!

-------------------------------------------
மனசு

குழம்பியவருக்கு குப்பைதொட்டி..
தெளிந்தவருக்கு கோவில்..

------------------------------------------
காதல்

உயிரில் கலந்தது..

அவளின் சுவாசகூட்டிலிருந்து
வெளிப்பட்ட புயலில் வீழ்ந்தது..

-----------------------------------------------------------