Saturday, March 3, 2007

நான் ரசித்த கவிதைகள்

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.
- பி.எம்.நாகராஜன்
-----------------------------------------------------------
வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பாவாழிய செந்தமிழ்!
வாழ்கநற் றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக!தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

-பாரதியார்
---------------------------------------------------------------------
மழைத்துளி

பன்னீர்துளிகள்வேண்டாம் -
உன்வியர்வைத்துளிகள்போதும் -
அதுமண்வாசனையை கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

No comments: