Saturday, December 29, 2007

அனைத்து உயிரும் ஒன்றடா..



ஹரியும் சிவனும் ஒன்றடா..


இதை புரியாத‌வ‌ன் வெறும் ம‌ண்ண‌டா..



அனைத்து உயிரும் ஒன்றடா..


இதில் பாகுபாடுகள் ஏனடா..



உன் ரத்தம் என் ரத்தம் சிவப்படா..


இதை புரிந்து கொள்ளடா மானிடா..

என்னை யார் சுமப்பார்?



பிறந்தவுடன் தகப்பன் முகச் சுளிப்பை சுமந்து


பின் பிறந்த தம்பியைச் சுமந்து


கல்வி கற்க புத்தகம் சுமந்து


பருவ வயதில் காத்லைச் சுமந்து



கூடலில் கணவனைச் சுமந்து


கருவுற்று குழந்தை சுமந்து


வறுமையிலும் குடும்பம் சுமந்து


மகள் வயிற்றுப் பேத்தியைச் சுமந்து



இன்று என் வாழ்வே கூன் ஆனதே


இறுதி ஊர்வலத்தில்


என்னை யார் சுமப்பார்?

பிரிவின் வலி


கண்ணிரை மறைக்க‌


முயல்கிறேன்..


கண்களிடமிருந்து!!