Saturday, May 12, 2007

என் இனிய இணையதள தோழிக்கு..



கண்கள் சந்திக்கவில்லை
மலர் போன்ற மனங்கள் சந்தித்தன..
கைக் குலுக்கவில்லை
நட்பென்னும் மொட்டு விரிந்தன..

முகமறியா நமக்குள் எதற்கு
இந்த நட்பென்று வினவியதற்கு
"நம்பிக்கை" என்ற ஒற்றை வரியில்
என் நட்பினை அள்ளி சென்றவளே..

என் குரல் கேட்டு அடைந்த உவகையிலும்
என் செல்ல கோபத்தில் உருண்டோடிய கண்ணிரிலும்
அதீத அன்பினில் உரிமையுடன் தரும் திட்டுகளிலும்
தெரிகிறது உன் நட்பின் வலிமை..

உன் பெயரைவிட-உன்
நட்பின் ஆத்மாவை நேசிக்கிறேன்..
"சாட் தோழன்" என்பதை "வாழ்நாட் தோழனாக" மாற்று
என்னுயிரையும் நம் நட்பிற்கு ஈவேன்..

குறிஞ்சி மலர் போல் நம் நட்பு
மலர்ந்து மணம் வீசாவிடினும்
வாடாமலிருக்க முற்படுவோம்
வா என் தோழியே!!

2 comments:

ஜே கே | J K said...

இனையத்தில் இவ்வளவு ஆழமான நட்பு கிடைப்பது அரிதுதான்.

Anonymous said...

யாருப்பா அந்த இணைய தோழி நான் இல்லயே?? ;)