Saturday, May 12, 2007

நிலா ரசிகருக்காக



நிலா ரசிகையின் மனது

நான் பார்த்த முதல் மின்னல்
உன் கண்களில்..

நான் ஓரக்கண்ணீல் ரசித்த முதல் ஓவியம்
உன் புன்சிரிப்பில்..

நான் கண்கள் பனித்த முதல் தருணம்
உன் செல்ல கோபத்தில்..

நான் விரும்பிய முதல் பரிசு
உன் முத்தத்தில்..

நான் கண்ட முதல் ஸ்பரிசம்
உன் தொடுதலில்..

நான் உன்னிடம் பகிரா முதல் கவிதை
என் காதல்..

நான் பெற இருக்கும் முதல் உவகை
உன் காதல்..

நிலா ரசிகனின் மனது

கள்ளி! உன் விழியினை விட
கூர்மையான வரிகளை
ஒளித்தது ஏனோ!!
இன்றைய நிலவொளியில் மிளிரதானோ!!

கருந்திட்டு கொண்ட முழுநிலவு வெட்கியது
என்னால் வந்த பரு கொண்ட உன் மதிமுகம் கண்டு..
நிலா ரசிகனாகிய நான் தூரத்தில் ஒளிரும் நிலவினை மறந்து
உன் காதலை பெற்று பூலோக நிலவின் ரசிகனானேன்!!

3 comments:

ஜே கே | J K said...

அருமையான் கவிதை கமல்...

காதலிக்க ஆரம்பிச்சுட்ட போல...

வாழ்த்துக்கள் கமல்.

நல்ல காதலுக்கும் கவிதைக்கும்...

Unknown said...

தோழருக்கு வணக்கம்..

கவிதை வரிகளில்
மட்டுமல்ல
அதைப் படிக்கும்
நமது மனதிலும்
காதல் படந்தோட
செய்திருக்கும்,
தங்கள்
கவிதைக்கும் காதலுக்கும்
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்...

Anonymous said...

Welldone Kamal

Keep it up