Wednesday, May 16, 2007

பசி


"பசிக்கிறதம்மா!!" அந்த உயிரின் கடைசிக் குரல்!
எச்சிலில்லா நாக்கு! ஈரமறியா உதடுகள்!!
பரட்டை தலை! ஒட்டிய வயிறு!
சூம்பிய கால்கள்! அரிசியின் உருவத்தை மறந்த கண்கள்!
உணவை பார்த்த மகிழ்ச்சியில் விரல்கள்!
அம்மணத்தை மறைக்க பாதி உடை!
வயிற்றின் நிர்வாணத்தை மறைக்க உணவேங்கே?

தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!
எனக்காக ஜகத்தை அழிக்கவேண்டாம்..
ஒரு பிடி உணவளியுங்கள்!

1 comment:

ஜே கே | J K said...

ஒரு பக்கம் எல்லாம் கிடைப்பவர்கள் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் இப்படி உண்வே இல்லாமல் தவிக்கிறார்கள்.