Saturday, April 28, 2007

சொல்லடி என் செல்லமே..



நாம் பிறந்தநாள் முதல்
இன்றுவரை பிரிந்ததில்லை..

நான் முதல் பரிசாக தந்த பாசிமணி
இன்னும் உன் கழுத்தில்..

உன் ரகசிய அலமாரியில்
நாம் குழந்தையில் எடுத்த படம் இன்னும் அழியாமல்..

நான் தூங்கிய பிறகு "என் செல்ல அண்ணா" என்று
அலுங்காமல் தந்த முத்ததின் அழகுதான் என்ன..

என் பசியறிந்து உணவளிப்பாய்,
நோயுற்றபோது தாயானாய்,

காதலின் தோல்வியில் அழுதபோது
உன் பாசக்கரங்களால் என் வலியையும் துடைத்தாயே..

என் மகிழ்ச்சியில் குதித்ததும்,
தோல்வியில் துவண்டதும்..

நீ என்னை தந்தையென்பதும்,
நான் உன்னை தாயேன்பதும்..

மடி மீது சுமக்கும் வயதில்லாததால்தான்
மனதில் சுமந்தாயோ!!

அட.. அட..
நம் பாசத்தை விவரிக்க வார்த்தைகளேது!!

சொல்லடி என் செல்லமே
நீ என் தங்கையா?? தாயா??

3 comments:

Anonymous said...

anna intha kavithai enakku thane
:-)

கமல் ராஜன்.பா said...

நீ யாரம்மா?? சொன்னால்தானே தெரியும் தங்கையா இல்லை பாட்டியா என்று?? :)

S. Prakash,B.Com(com app).,MBA., said...

super o super