Wednesday, April 25, 2007

தியாகம்




"இன்று என் பிறந்தநாள்
கண்டிப்பாக பால்பாயாசம்.."

"அம்மா! ஜாமுன் வேணும்."
குழந்தையின் சிரிப்பில் மறந்தாள்..

பொங்கல் செய்யலாம்.. "பூரி பண்ணேன்!"
கணவரின் பாசக்குரலில் மறந்தாள்..

வடபழனி கோவில்தான்.. "கிளம்பும்மா விநாயகர் கோவிலுக்கு"
மாமியாரின் தோரணைக்குரலில் மறந்தாள்..

வாசலில் பூங்கொத்து..
தோழியை நினைத்து தன்னை மறந்தாள்..

மெல்லிய புன்னகையுடன்
தினமும் தன் ஆசைகளை மறக்கும்
என் தியாகத்தாய்!!

1 comment:

Anonymous said...

நீனைத்து இல்ல கமல் நினைத்து

nice try

keep it up