Saturday, April 28, 2007

ராஜனின் சிந்தனைகள்

தன் குழந்தைக்கு தராமல்
ஊரார் குழந்தைளுக்கு
தன் பால் கொடுத்து மகிழ்கிறாள்-பசு
----------------------------------------------------
என்ன ஆச்சரியம்!! சிவகாசி சிறுவர்களின்
வியர்வையில் நனைந்தும்
வெடிக்கிறதே! பட்டாசு!!!!
-----------------------------------------------------
ரிக் ஷா
பால் மணம் மாறா குழந்தை
ஏன் எமன் வாகனத்தில்
எதிர்புறமாக அமர்ந்திருக்கிறாள்??

வர போகும் எமனை எதிர்க்க
இருக்கும் இளஞ்சாவித்திரியோ!!

-----------------------------------------------------
பாடம்
ஏட்டு பாடத்தை முடிப்பதற்கு முன்
வாழ்க்கைக் பாடம் ஏனோ??
சிறு வயதில் கருகலைப்பு!!
-----------------------------------------------------
ஆஞ்சநேயா!!
மனிதர்களுக்கு தான் தண்ணிரை
குடிப்பதிலும்,பிரிப்பதிலும் பிரச்சனை..

ஆஞ்சநேயா!!கடவுளாகிய உனக்குமா!!
"என்று தணியும் இந்த தாகம்??"
"என்று முடியும் இந்த பிரிவினை மோகம்??"

No comments: