கண்டதை உற்று நோக்கும் கண்களை
தானம் செய்!!
காதலுக்காக சிந்தும் ரத்தத்தை
தானம் செய்!!
கேளிக்கையில் மிந்தும் உணவை
தானம் செய்!!
ஏழைக்கு இலவசமாக கல்வியை
தானம் செய்!!
நண்பர்களுக்கு பூப்போன்ற மனதை
தானம் செய்!!
உன் பாதிக்கு உண்மையான கற்பை
தானம் செய்!!
தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை
தானம் செய்!!
உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"
தானம் செய்!!
இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல்
நிதானமாய் செய்!!
Wednesday, May 16, 2007
Saturday, May 12, 2007
நிலா ரசிகருக்காக

நிலா ரசிகையின் மனது
நான் பார்த்த முதல் மின்னல்
உன் கண்களில்..
நான் ஓரக்கண்ணீல் ரசித்த முதல் ஓவியம்
உன் புன்சிரிப்பில்..
நான் கண்கள் பனித்த முதல் தருணம்
உன் செல்ல கோபத்தில்..
நான் விரும்பிய முதல் பரிசு
உன் முத்தத்தில்..
நான் கண்ட முதல் ஸ்பரிசம்
உன் தொடுதலில்..
நான் உன்னிடம் பகிரா முதல் கவிதை
என் காதல்..
நான் பெற இருக்கும் முதல் உவகை
உன் காதல்..
நிலா ரசிகனின் மனது
கள்ளி! உன் விழியினை விட
கூர்மையான வரிகளை
ஒளித்தது ஏனோ!!
இன்றைய நிலவொளியில் மிளிரதானோ!!
கருந்திட்டு கொண்ட முழுநிலவு வெட்கியது
என்னால் வந்த பரு கொண்ட உன் மதிமுகம் கண்டு..
நிலா ரசிகனாகிய நான் தூரத்தில் ஒளிரும் நிலவினை மறந்து
உன் காதலை பெற்று பூலோக நிலவின் ரசிகனானேன்!!
நான் பார்த்த முதல் மின்னல்
உன் கண்களில்..
நான் ஓரக்கண்ணீல் ரசித்த முதல் ஓவியம்
உன் புன்சிரிப்பில்..
நான் கண்கள் பனித்த முதல் தருணம்
உன் செல்ல கோபத்தில்..
நான் விரும்பிய முதல் பரிசு
உன் முத்தத்தில்..
நான் கண்ட முதல் ஸ்பரிசம்
உன் தொடுதலில்..
நான் உன்னிடம் பகிரா முதல் கவிதை
என் காதல்..
நான் பெற இருக்கும் முதல் உவகை
உன் காதல்..
நிலா ரசிகனின் மனது
கள்ளி! உன் விழியினை விட
கூர்மையான வரிகளை
ஒளித்தது ஏனோ!!
இன்றைய நிலவொளியில் மிளிரதானோ!!
கருந்திட்டு கொண்ட முழுநிலவு வெட்கியது
என்னால் வந்த பரு கொண்ட உன் மதிமுகம் கண்டு..
நிலா ரசிகனாகிய நான் தூரத்தில் ஒளிரும் நிலவினை மறந்து
உன் காதலை பெற்று பூலோக நிலவின் ரசிகனானேன்!!
என் இனிய இணையதள தோழிக்கு..

கண்கள் சந்திக்கவில்லை
மலர் போன்ற மனங்கள் சந்தித்தன..
கைக் குலுக்கவில்லை
நட்பென்னும் மொட்டு விரிந்தன..
முகமறியா நமக்குள் எதற்கு
இந்த நட்பென்று வினவியதற்கு
"நம்பிக்கை" என்ற ஒற்றை வரியில்
என் நட்பினை அள்ளி சென்றவளே..
என் குரல் கேட்டு அடைந்த உவகையிலும்
என் செல்ல கோபத்தில் உருண்டோடிய கண்ணிரிலும்
அதீத அன்பினில் உரிமையுடன் தரும் திட்டுகளிலும்
தெரிகிறது உன் நட்பின் வலிமை..
உன் பெயரைவிட-உன்
நட்பின் ஆத்மாவை நேசிக்கிறேன்..
"சாட் தோழன்" என்பதை "வாழ்நாட் தோழனாக" மாற்று
என்னுயிரையும் நம் நட்பிற்கு ஈவேன்..
குறிஞ்சி மலர் போல் நம் நட்பு
மலர்ந்து மணம் வீசாவிடினும்
வாடாமலிருக்க முற்படுவோம்
வா என் தோழியே!!
முகமறியா நமக்குள் எதற்கு
இந்த நட்பென்று வினவியதற்கு
"நம்பிக்கை" என்ற ஒற்றை வரியில்
என் நட்பினை அள்ளி சென்றவளே..
என் குரல் கேட்டு அடைந்த உவகையிலும்
என் செல்ல கோபத்தில் உருண்டோடிய கண்ணிரிலும்
அதீத அன்பினில் உரிமையுடன் தரும் திட்டுகளிலும்
தெரிகிறது உன் நட்பின் வலிமை..
உன் பெயரைவிட-உன்
நட்பின் ஆத்மாவை நேசிக்கிறேன்..
"சாட் தோழன்" என்பதை "வாழ்நாட் தோழனாக" மாற்று
என்னுயிரையும் நம் நட்பிற்கு ஈவேன்..
குறிஞ்சி மலர் போல் நம் நட்பு
மலர்ந்து மணம் வீசாவிடினும்
வாடாமலிருக்க முற்படுவோம்
வா என் தோழியே!!
Friday, May 11, 2007
காதல் பறவைகள்
Thursday, May 10, 2007
காந்தி தாத்தா
Tuesday, May 8, 2007
மீனவக் கவிதைகள்
Friday, May 4, 2007
Subscribe to:
Posts (Atom)



