Saturday, December 29, 2007

அனைத்து உயிரும் ஒன்றடா..



ஹரியும் சிவனும் ஒன்றடா..


இதை புரியாத‌வ‌ன் வெறும் ம‌ண்ண‌டா..



அனைத்து உயிரும் ஒன்றடா..


இதில் பாகுபாடுகள் ஏனடா..



உன் ரத்தம் என் ரத்தம் சிவப்படா..


இதை புரிந்து கொள்ளடா மானிடா..

என்னை யார் சுமப்பார்?



பிறந்தவுடன் தகப்பன் முகச் சுளிப்பை சுமந்து


பின் பிறந்த தம்பியைச் சுமந்து


கல்வி கற்க புத்தகம் சுமந்து


பருவ வயதில் காத்லைச் சுமந்து



கூடலில் கணவனைச் சுமந்து


கருவுற்று குழந்தை சுமந்து


வறுமையிலும் குடும்பம் சுமந்து


மகள் வயிற்றுப் பேத்தியைச் சுமந்து



இன்று என் வாழ்வே கூன் ஆனதே


இறுதி ஊர்வலத்தில்


என்னை யார் சுமப்பார்?

பிரிவின் வலி


கண்ணிரை மறைக்க‌


முயல்கிறேன்..


கண்களிடமிருந்து!!

Saturday, July 21, 2007

*குப்பை*

தூக்கி எறிந்துவிடுவாய்
என தெரிந்தும்
மனம்
குப்பையானது..


நொடியாவது உன்
அன்பு கரம்
பற்ற..

*என் அன்பிற்கு*

அன்பை தா பெற்று கொள்கிறேன்..
துன்பம் தா தாங்கி கொள்கிறேன்..
உன் கஷ்டம் சொல் தோள் தருகிறேன்..
உவகை அடை உன்னுடன் சிரிக்கிறேன்..
அழு கண்ணிர் துடைக்கிறேன்..
முத்தமிடு இன்னும் கேட்கிறேன்..
நம்மை பிரித்து பார்க்காதே இறந்துவிடுவேன்..

Monday, June 25, 2007

*தாலாட்டு..*


முழுநேர வேலையில் உடல் களைத்த
குழந்தையின் அரைதூக்க கண்களை பார்த்து..

சோறூட்டி,மடி சாய்த்து
தன் அன்பினில் விழி மூட வைத்து
அலுங்காமல் தோள் தட்டி.

"ஆராரோ ஆரிராரோ என் த‌ங்க‌ம்" என‌
மெல்ல‌ முணுமுணுக்கும்
தாயின் அன்பு பாட்டு..

Friday, June 22, 2007

அவளின் யதார்த்த எதிர்பார்ப்புகள்


மேகத்தறியில் நெசவு செய்ய வேண்டாம்..
நிர்வாணம் மறைக்க உடை கொடு போதும்..

சூரியனை சுருக்கி வீரனாக வேண்டாம்..
என் கற்பிற்கு காவலாயிரு போதும்..

மின்னலை பிடித்து ஆபரணமாக்க வேண்டாம்..
இருப்பதை கரைக்காமல் வாழு போதும்..

விண்மின் பிடித்து விருந்து வைக்க வேண்டாம்..
பசிக்கும் வேளை கையளவு உணவிடு போதும்..

என்னழகை பாராட்ட வேண்டாம்..
தாய்மையடைய செய் போதும்..

மக்களை ஏமாற்றி செல்வம் வேண்டாம்..
நேர்மையாயிரு போதும்..

என‌க்கு முன் சுவ‌ர்க்க‌ம் பார்க்க‌ வேண்டாம்..
உன் விழிக‌ளை பார்த்து கொண்டே ம‌ர‌ணம் தா போதும்..